• Download mobile app
25 Jul 2026, SaturdayEdition - 3818
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உ.பி மாநில தேர்தலுக்கென மாவட்ட கிடங்கிற்கு எடுத்துச்செல்லும் பணிகள் தீவிரம்

October 20, 2021 தண்டோரா குழு

உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் அங்கு ரிசர்வ் மற்றும் பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உத்தரப்பிரதேச மாநில தேர்தல் பயன்பாட்டுக்கு எடுத்துச் செல்லும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கோவை கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட ரிசர்வ் மற்றும் பயிற்சிக்காக பெறப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள், மதுக்கரை வட்டாச்சியர் அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டிருந்தன இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அறையின் சீல் மதுக்கரை வட்டாச்சியர், நாகராஜ் தலைமையில் திறக்கப்பட்டு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் முன்னிலையில் பலத்த பாதுகாப்புடன்,கொண்டு செல்லப்பட்டன.

இதில் அ.தி.மு.க.புறநகர் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி பிரிவின் செயலாளர் மற்றும் முன்னாள் அரசு வழக்கறிஞர் தாமோதரன், மற்றும் வழக்கறிஞர்கள் ராமச்சந்திரன் ஆறுச்சாமி ஆகியோர் உடன் இருந்தனர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் மற்றும் பயிற்சிக்காக பெறப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களை உத்தரபிரதேச பொதுத்தேர்தல் பயன்பாட்டுக்கான மாவட்ட EVM சேமிப்பு கிடங்கிற்கு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது.

மேலும் படிக்க