• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறுவாணி அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்வு

October 19, 2021 தண்டோரா குழு

சிறுவாணி அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்துள்ளது.

கோவை மாநகராட்சியில் 26 வார்டுகள், நகரை ஒட்டியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சிறுவாணி குடிநீர் நீராதாரமாக உள்ளது. அணையில் இருந்து தினமும் குடிநீருக்காக 10 கோடி லிட்டர் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தது.

இதன் காரணமாக அணைக்கு செல்லும் முக்தியாறு, பட்டியலாற்றில் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது.

இதுகுறித்து, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில்,

சிறுவாணி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்துள்ளது. மாநகராட்சி சார்பாக 96.65 எம்.எல்.டி நீர் குடிநீருக்காக எடுப்படுகிறது, என்றார்.

மேலும் படிக்க