• Download mobile app
11 Feb 2026, WednesdayEdition - 3654
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஆயுர்வேத மருத்துவமனையில் தமிழக முன்னாள் துணை முதல்வர் ஓ.பி.எஸ் அனுமதி

October 19, 2021 தண்டோரா குழு

கோவை கணபதியில் இருக்கும் ஒரு ஆயுர்வேத மருத்துவமனையில் தமிழக முன்னாள் துணை முதல்வர் ஓ.பி.எஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழக முன்னாள் துணை முதல்வரும், அதிமுகவின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் நேற்று இரவு கோவை வந்தார். பின்னர் கோவை கணபதியில் உள்ள ஒரு ஆயுர்வேத மருத்துவமனைக்கு சென்றுள்ள ஓ.பி.எஸ் தற்போது அங்கு சிகிச்சையில் இருக்கிறார். அவருக்கு ஆயில் மசாஜ், நீராவி மற்றும் எண்ணெய் குளியல் போன்ற பல்வேறு ஆயுர்வேத புத்துணர்வு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அடுத்து வரும் சில தினங்களுக்கு ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கியிருந்து ஓ.பி.எஸ் சிகிச்சை பெற இருக்கிறார். இதன்காரணமாக அங்கு பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன.

மேலும் படிக்க