• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நகைப்பட்டறை உரிமையாளர் சாவு

October 18, 2021 தண்டோரா குழு

கோவை கெம்பட்டி காலனி எல்ஜி தோட்டம் சேர்ந்தவர் ஆனந்தகுமார்(68). நகைப்பட்டறை உரிமையாளர். இவர் மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார்.

சில மாதங்களாக அவர் தூக்கம் வராமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக அவர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று தூக்க மாத்திரை சாப்பிட்டு வந்தார். இதனால் மனவேதனையில் இருந்த ஆனந்தகுமார் வாழ்க்கையில் விரக்தியடைந்து சம்பவத்தன்று வீட்டில் இருந்த போது அளவுக்கதிமான தூக்க மாத்திரை சாப்பிட்டு சுய நினைவை இழந்தார்.

குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக கடைவீதி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க