• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நகைப்பட்டறை உரிமையாளர் சாவு

October 18, 2021 தண்டோரா குழு

கோவை கெம்பட்டி காலனி எல்ஜி தோட்டம் சேர்ந்தவர் ஆனந்தகுமார்(68). நகைப்பட்டறை உரிமையாளர். இவர் மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார்.

சில மாதங்களாக அவர் தூக்கம் வராமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக அவர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று தூக்க மாத்திரை சாப்பிட்டு வந்தார். இதனால் மனவேதனையில் இருந்த ஆனந்தகுமார் வாழ்க்கையில் விரக்தியடைந்து சம்பவத்தன்று வீட்டில் இருந்த போது அளவுக்கதிமான தூக்க மாத்திரை சாப்பிட்டு சுய நினைவை இழந்தார்.

குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக கடைவீதி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க