• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

October 18, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டு சீர் செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொண்டார்.

கோவையில் கடந்த 2 தினங்களுக்கு மேலாக மிதமானது முதல், கன மழை பெய்து வருகின்றது. இதனால், கோவை மாநகராட்சி பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்காத வண்ணம், பணிகளை முடக்கி விட்டு, மாநகராட்சி அதிகாரிகளுக்கு, ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா உத்திரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கரும்புக்கடை, சாரமேடு உள்ளிட்ட்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர், அப்பகுதியில் அடைப்பட்டு இருந்த கழிவு நீர் கால்வாய்கலை சீர் செய்து, மழை நீரை வெளியேற்றவும் உத்திரவிட்டார். தொடர்ந்து அதிகாரிகள் தூய்மை பணியாளர்களை கொண்டு உடனடியாக சீர் செய்தனர்.

மேலும் படிக்க