• Download mobile app
25 Jul 2026, SaturdayEdition - 3818
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகள் திறக்கும் நேரம் அதிகரிப்பு !

October 14, 2021 தண்டோரா குழு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவ.1-3ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் காலை 8 முதல் இரவு 7 மணி வரை கடைகளை திறந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வரும் நவ.4-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவ.1-3ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் காலை 8 முதல் இரவு 7 மணி வரை கடைகளை திறந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

‘பார்வையில் காணும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் தலைமையில் 11.10.2021 அன்று நடத்தப்பட்ட ஆய்வு கூட்டத்தில் உணவுத் துறை அமைச்சரால் வழங்கப்பட்ட அறிவுரைகளின் படி தீபாவளி-2001 பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பயன்பெறும் வகையில் நவம்பர்-2021 மாதத்திற்கான சிறப்பு அத்தியாவசியப் பொருட்கள் அதிகபட்சமாக முன்தர்வு முழுமையாக முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் 01.11.2021, 02.11.2021 மற்றும் 03.11.2021 ஆகிய தினங்களில் நியாயவிலைக் கடைகள் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை திறக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சரால் வழங்கப்பட்ட அறிவுரைகளின்படி சிறப்பு அத்தியாவசியப் பொருட்கள் நவம்பர் மாதத்திற்கான அதிகபட்சமாக முன்நகர்வினை முழுமையாக முடிக்கப்பட வேண்டும் எனவும்.

மேலும் 1.11.2021, 02.11.2021 மற்றும் 03,11,2021 ஆகிய தினங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நியாயவிலை கடைகள் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க