• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு தள்ளுவண்டி வழங்கிய கமஹாசன் !

August 3, 2021 தண்டோரா குழு

கோவிட் காலத்தில் உதவி செய்வது மனிதன் மனிதனுக்குச் செய்யும் உதவியே தவிர இந்தியன் செய்யும் உதவி அல்ல தமிழன் தமிழனுக்கு செய்யும் உதவி அல்ல என மநீம தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார்.

கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் மாற்றுத் திறனாளிகள் ஆட்டோ ஓட்டு வீடுகள் உட்பட 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.இந்த முகாமினை மக்கள் நீதி மய்யம் நடிகர் கமலஹாசன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அதில் கோவிட் காலத்தில் உதவிகள் செய்வது மனிதன் மனிதனுக்கு செய்யும் உதவியே தவிர இந்தியன் இந்தியனுக்கு செய்யும் உதவி அல்ல தமிழன் தமிழன் உப்பு செய்யும் உதவி அல்ல என்று தெரிவித்தார். எங்களுக்கு முன்பு என பலரும் இதனை செய்து வருகின்றனர். அவர்களை முன்னோடியாக எடுத்துக் கொண்டு நாங்கள் இந்த களத்தில் இறங்கி உள்ளோம் என்று தெரிவித்தார்.

மேலும் இக்காலத்தில் சாதிகளை கடந்து நாம் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றும் கூறினார்.அதனைத் தொடர்ந்து கட்சியின் சார்பில் மாற்றுத் திறனாளிகள் இரண்டு பேருக்கு நலத்திட்ட உதவிகளை அளித்தார்.அதில் ஒரு குடும்பத்தார்,கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் காலனி அணிவித்த மாற்றுதிறனாளி சிறுவனின் குடும்பத்தார் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க