• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு

June 9, 2021 தண்டோரா குழு

கோவையை அடுத்த சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவையில் நகர்புற பகுதிகளில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்கு வந்த நிலையில் ஊரக,கிராம பகுதிகளில் கொரோனா தொற்று நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகின்றது.இந்நிலையில் கோவையை அடுத்த சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொண்டையம்பாளையம் ஊராட்சியில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தணிக்கை மற்றும் ஊராட்சிகள் இயக்குனர் மதுரா ஆய்வு செய்தார்.

அப்போது ,ஊராட்சி தலைவர் கோவிந்தராஜ் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனலட்சுமி மற்றும் அனிதா ஆகியோரிடம்,கிராம மக்களிடம் கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது,
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் வெளியில் செல்லாமல் கண்காணித்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தர வேண்டும்.

கிராமப்புறங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் போன்ற கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து அறிவுறுத்தினார். முன்னதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள், சுகாதார ஊழியர்களுக்கு முக கவசங்கள், கிருமிநாசினி போன்ற கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.இந்த ஆய்வின் போது கொண்டையம்பாளையம் ஊராட்சி துணை தலைவர் சண்முக சுந்தரம், ஊராட்சி செயலர் பிரகாஷ்,கிராம நிர்வாக அலுவலர் பாண்டியன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க