September 16, 2020
தண்டோரா குழு
தேயிலை விவசாயிகள் பயன்படும் வகையில் நேரடியாக தேயிலையை வாங்கி பயன்படுத்த உள்ளதாக கோவையில் துவங்கியுள்ள ”Desi Tea Time and Cafe club நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் சுமார் 700க்கும் அதிகமான கிளைகளைக் கொண்டுள்ள இந்தியாவின் முன்னணி தேயிலை நிறுவனமான தேசி டீ டைம் பிரைவேட் லிமிடெட் சார்பாக கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் டீ டைம் மற்றும் கஃபே கிளப் என்ற தேநீரகம் துவங்கப்பட்டுள்ளது. 20 வகையான டீ வகைகளுடன் கோவையில் முதன் முறையாக துவங்கப்பட்டுள்ளது.இதன் துவக்க விழாவில் தமிழக பா.ஜ.க.,மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கடையை திறந்து வைத்தார்.
இது டீ டைம் நிறுவனத்தின் நிறுவனர் உதய் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
டீ டைம் நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய கிராமத்தில் துவங்கப்பட்டு, தற்போது 700க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டு வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும்,குறிப்பாக குறைவான விலையில் சுமார் இருபது வகையான தேநீர் வகைகளை வழங்கி வருவதாகவும்,நாங்கள் தனித்துவமான சொந்த உற்பத்தி தேயிலையை பயன்படுத்துகிறோம்.
வரும் காலங்களில் தேயிலை உற்பத்தியாளர்களிடம் நேரடி கொள்முதல் செய்ய உள்ளதாகவும் இதனால் தேயிலை விவசாயிகள் பயனடைய முடியும் என அவர் தெரிவித்தார்.
மேலும் அடுத்த ஆண்டிற்குள் 2000 கடைகள் திறக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது, டீ டைம் முதன்மை செயல் அதிகாரி கபிலன், கொங்கு மண்டல பங்குதாரர் இளங்கோ ஆகியோர் உடனிருந்தனர்.