September 15, 2020
தண்டோரா குழு
கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மூத்த ஊடகவியலாளரும்,திரைப்பட நடிகருமான ப்ளோரன்ட் பெரேரா காலமானார்.
விஜயின் புதிய கீதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ப்ளோரன்ட் பெரேரா.இவர் என்கிட்ட மோதாதே (2017), வேலையில்லா பட்டதாரி 2 (2017), ராஜா மந்திரி,தொடரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.பல வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றி வந்து இருக்கிறார்.
இந்நிலையில்,கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்,சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தார். இவர் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.