• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவிலுக்கு பூஜை செய்ய சென்ற மூதாட்டி, காட்டு யானை தாக்கி உயிரிழப்பு

September 15, 2020 தண்டோரா குழு

கோவை அருகே கோவிலுக்கு பூஜை செய்ய சென்ற மூதாட்டி காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் பன்னிமடை அருகேயுள்ள பாப்பநாய்க்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் லீலாவதி. 73 வயதான இவர் அதேபகுதியில் அழகர் கோவிலுக்கு அடிக்கடி சென்று பூஜை செய்வது வழக்கம்.அதன்படி இன்று அதிகாலை 5 மணியளவில் கோவிலுக்கு பூஜை செய்ய சென்றுள்ளார்.அப்போது எதிரே வந்த ஒற்றை ஆண் காட்டு யானை தாக்கியதில், நிகழ்விடத்திலேயே லீலாவதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். கோவை வனத்துறையினர் உடலைக் கைப்பற்றி ஊடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி, அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

மேலும் படிக்க