• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

September 14, 2020 தண்டோரா குழு

புதிய தமிழகம் கட்சியின் விருதுநகர் மாவட்ட செயலாளர் படுகொலையை கண்டித்து அக்கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய தமிழகம் கட்சியின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் இராஜலிங்கம் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில். கூலிப்படையை ஏவி படுகொலை செய்த குற்றாவாளிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சார்பில்கோவை மாநகர் மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சங்கர்குரு தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இது குறித்து செய்தியாளரிடம் பேசிய சங்கர் குரு, ராஜலிங்கத்தை படுகொலை செய்த இராஜபாளையம் முருகையா பாண்டியன் உள்ளிட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மேலும் படிக்க