September 10, 2020
தண்டோரா குழு
கோவை துடியலூர் அருகே வட்ட மலைப்பாளையத்திலுள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களுக்கான துவக்கவிழா நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் காணொலி மூலம் நடைப்பெற்றது.
இவ்விழாவில் கல்லூரியின் எலெக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் துறை தலைவர் D. கோபால கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார்.கல்லூரி முதல்வர் முனைவர் R.N உமா மற்றும் துறை தலைவர்கள் குத்து விளக்கை ஏற்றி விழாவினை துவக்கி வைத்தனர் இவ்விழாவில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லக்ஷ்மி நாராயணஸ்வாமி தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசும்போது,
மாணவர்கள் தாங்கள் கற்றுக் கொள்ளும் கல்வியின் மூலம் சவால்களை சந்திக்கவும் , அதனை எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும் என்றார் இதனை தொடர்ந்து முதல்வர் முனைவர் கல்லூரியை பற்றியும் , ஒவ்வொரு துறை எடுத்துரைத்தார் R.N உமா பேசும்போது குறித்தும் விரிவாக இவ்விழாவில் பெற்றோர்களும்,மாணவர்களும் காணொலி மூலம் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். நிறைவாக மெக்கானிக்கல் துறை தலைவர் ப.சுரேஷ்குமார் நன்றி கூறினார்.