கோவை மாவட்டத்தில் மனித-யானை மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக தொடர்ந்து யானைகள் உயிரிழந்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு தந்ததுக்காக வெட்டிக் கொல்லப்பட்டது ஒரு யானை. அதற்கு முன்பு வெடிமருந்தை சாப்பிட்டு வாயில் காயத்துடன் இறந்து போனது கேரளாவில் ஒரு யானை. அதேபோல கோவையில், உடல் காயமடைந்து எழுந்திரிக்க முடியாமல் இறந்து போனது.
அந்தவகையில் தற்போது அவுட்டுக்காய் என்னும் வெடியை சாப்பிட்டு நாக்கு சேதமாகி கடந்த ஒரு மாத காலமாக வலியுடன் சுற்றி வந்தது ஒரு மக்னா யானை. இதற்கு மருந்து அளித்து காப்பாற்ற தமிழக , கேரள வனத்துறையினர் முயற்சி செய்தனர். ஆனால், முயற்சி பலனளிக்காததால் நேற்று கைவிரித்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை கோயம்புத்தூர் மாவட்டம் சோலையூர் அருகிலுள்ள மரப்பாலம் பகுதியில் இந்த மக்னா யானை உயிரிழந்து கிடந்தது.
கோவை ஆனமலைஸ் டொயோட்டோவில் வாடிக்கையாளர்களுக்கு அர்பன் குரூஸர் ஹைரைடர் விழிப்புணர்வு அமர்வு
கோவை புரோசோன் மாலில் கிரிக்கெட் ரசிகர்களை சந்தித்த லைகா கோவை கிங்ஸ் அணியினர்
ரெனாட்டஸ் புரோக்கான் நிறுவனம் அதன் புது தயாரிப்பை அறிமுகம் செய்தது
1.36 கோடி மரங்கள் நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை -நடப்பாண்டில் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு
கிரசர், குவாரிகள் சங்கத்தின் சார்பில் 5000 மரக்கன்றுகள் நடவு
கோவை குமரகுரு கல்லூரி மாணவர்கள் உலகளாவிய சாதனை: மாற்று எரிசக்தி படகு, ரோபோடிக்ஸ் உருவாக்கம் – செய்தி பட