• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வாயில் காயம்பட்டு சுற்றிவந்த மக்னா யானை இன்று அதிகாலை உயிரிழந்தது

September 9, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் மனித-யானை மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக தொடர்ந்து யானைகள் உயிரிழந்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு தந்ததுக்காக வெட்டிக் கொல்லப்பட்டது ஒரு யானை. அதற்கு முன்பு வெடிமருந்தை சாப்பிட்டு வாயில் காயத்துடன் இறந்து போனது கேரளாவில் ஒரு யானை. அதேபோல கோவையில், உடல் காயமடைந்து எழுந்திரிக்க முடியாமல் இறந்து போனது.

அந்தவகையில் தற்போது அவுட்டுக்காய் என்னும் வெடியை சாப்பிட்டு நாக்கு சேதமாகி கடந்த ஒரு மாத காலமாக வலியுடன் சுற்றி வந்தது ஒரு மக்னா யானை. இதற்கு மருந்து அளித்து காப்பாற்ற தமிழக , கேரள வனத்துறையினர் முயற்சி செய்தனர். ஆனால், முயற்சி பலனளிக்காததால் நேற்று கைவிரித்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை கோயம்புத்தூர் மாவட்டம் சோலையூர் அருகிலுள்ள மரப்பாலம் பகுதியில் இந்த மக்னா யானை உயிரிழந்து கிடந்தது.

மேலும் படிக்க