• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மதுக்கரை வனத்தை ஓட்டிய பகுதியில் உலா வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை கூண்டு வைப்பு

September 2, 2020 தண்டோரா குழு

மதுக்கரை வனச்சரகம் விநாயகர் கோவில் வீதி அருகே கடந்த சில வாரங்களுக்கு முன் வந்த சிறுத்தை ஒன்று அங்கு பட்டியில் இருந்த ஆட்டு குட்டிகளை அடித்துக் கொன்றது.இதையடுத்து வனத்துறை அங்கு கூண்டு வைத்து சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். ஆனால் நீண்ட நாள் ஆகியும் மீண்டும் சிறுத்தையின் நடமாட்டம் மீண்டும் அங்கு தென்படாத நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தர்மலிங்கேஸ்வரர் கோவில் அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து மதுக்கரை வனத்துறையினர் ரோந்து சென்ற போது அங்கு சிறுத்தை நாயை அடித்து கொன்றது தெரியவந்தது. இதனால் சிறுத்தையை பிடிக்க தர்மலிங்கேஸ்வரர் கோவில் அருகே ஒரு கூண்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு மற்றும் பகல் நேரத்தில் கூண்டீல் நாயை வைத்து சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் மதுக்கரை வனப்பகுதியில் உள்ள மலையில் இரண்டு சிறுத்தை நடமாடும் விடியோ ஒன்று உள்ளூர் வாட்ஸ் அப் குழுக்களில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் படிக்க