• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் பாஜகவின் பலம் அதிகமாகி இருக்கிறது – எல்.முருகன்

September 1, 2020 தண்டோரா குழு

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக தனித்தே போட்டியிட்டாலும் தமிழகத்தில் 60 தொகுதிகளில் வெற்றி பெரும் என பாஜக தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்

மறைந்த முன்னாள் குடியரசுதலைவர் பிரணாப் முகர்ஜி உருவபடத்திற்கு கோவை பா.ஜ.க அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் முருகன்,துணை தலைவர்கள் வானதி சீனிவாசன்,அண்ணாமலை, பொதுச்செயலாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் எல் முருகன் மறைந்த முன்னால் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களின் அரசியல் சிந்தனை,பொருளாதார நடவடிக்கைகள் நாட்டில் சிறப்பாக இருந்ததாக கூறினார்.தமிழகத்தில் இளைஞர்கள் தொடர்ந்து பாஜகவை நோக்கி வருவதாகவும் மத்திய அரசால் தமிழகம் அதிகமான பொருளாதார பயனை அடைந்து வருவதாகவும் கூறினார். அடுத்து அமையும் சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள் எனவும்
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக தனித்தே போட்டியிட்டாலும் தமிழகத்தில் 60 தொகுதிகளில் வெற்றி பெரும் என்றார்.

மேலும்,தமிழகத்தில் பாஜகவின் பலம் அதிகமாகி இருக்கிறது.சமீபத்தில் பாஜக நிர்வாகிகள் மீது மட்டும் வழக்கு போடப்பட்டுள்ள நிலையில் அப்படி பார்த்தால் அனைத்து கட்சி நிர்வாகிகள் மீதும் வழக்கு பதிந்திருக்க வேண்டும்.ரஜினி தேசியவாதி,ஆன்மீகவாதி அவர் வருகின்ற தேர்தலில் களம் கண்டால் சிறப்பாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க