August 30, 2020
தண்டோரா குழு
தமிழகம் முழுவதும் ஊரடங்கு காரணமாக, மருந்து கடை, பால் விற்பனை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
அனைத்து கட்சியினர் மற்றும் காவல் துறையினரின் உதவியோடு மதுபான கடைகள் மட்டும் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. கூடுதல் விலையில் மதுபானங்கள் விற்கப்பட்டாலும், மது பிரியர்கள் வாங்கிசெல்வது வாடிக்கையாகவே உள்ளது. மது பிரியர்கள் பலர் மதுபான கடை அமைந்துள்ள பாரிலே குடிக்கின்றனர். கொரொனாவை கட்டுப்படுத்த போடப்பட்ட உத்திரவு மது பிரியர்களுக்கு இல்லை என்பதே உண்மை.
முன்களப்பணியாளர்களை விட அரசு இவர்களுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கின்றதோ? என எண்ணத் தோன்றுகிறது.இந்நிலையில் இன்று கோவை குனியமுத்தூர் பகுதியிலுள்ள மதுபான கடை சட்ட விரோதமாக இயங்கி வருகிறது. வீடியோ எடுப்பவர் முதல் கேள்வி கேட்பவர் வரை என்ன வேண்டும் சொல்லுங்க தருகிறோம் என பணிந்தும், மிரட்டியும் காவல் துறை உதவியோடு செயல்படும் கடையை ஒன்றும் செய்ய முடியாது என்கின்றனர் அப்பகுதி மக்கள். இதற்கு அரசு ஊரடங்கு போடாமலே இருந்திருக்கலாம்.