• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஊரடங்கிலும் கள்ளச்சந்தையில் விற்கப்படும் மதுபானம்

August 30, 2020 தண்டோரா குழு

தமிழகம் முழுவதும் ஊரடங்கு காரணமாக, மருந்து கடை, பால் விற்பனை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

அனைத்து கட்சியினர் மற்றும் காவல் துறையினரின் உதவியோடு மதுபான கடைகள் மட்டும் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. கூடுதல் விலையில் மதுபானங்கள் விற்கப்பட்டாலும், மது பிரியர்கள் வாங்கிசெல்வது வாடிக்கையாகவே உள்ளது. மது பிரியர்கள் பலர் மதுபான கடை அமைந்துள்ள பாரிலே குடிக்கின்றனர். கொரொனாவை கட்டுப்படுத்த போடப்பட்ட உத்திரவு மது பிரியர்களுக்கு இல்லை என்பதே உண்மை.

முன்களப்பணியாளர்களை விட அரசு இவர்களுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கின்றதோ? என எண்ணத் தோன்றுகிறது.இந்நிலையில் இன்று கோவை குனியமுத்தூர் பகுதியிலுள்ள மதுபான கடை சட்ட விரோதமாக இயங்கி வருகிறது. வீடியோ எடுப்பவர் முதல் கேள்வி கேட்பவர் வரை என்ன வேண்டும் சொல்லுங்க தருகிறோம் என பணிந்தும், மிரட்டியும் காவல் துறை உதவியோடு செயல்படும் கடையை ஒன்றும் செய்ய முடியாது என்கின்றனர் அப்பகுதி மக்கள். இதற்கு அரசு ஊரடங்கு போடாமலே இருந்திருக்கலாம்.

மேலும் படிக்க