• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் மோசடி வழக்கில் கைது

August 29, 2020 தண்டோரா குழு

கோவையை சேர்ந்த காங்கிரஸ் இளைஞரணி மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன் (35) என்பவரை பண மோசடி வழக்கில், கர்நாடக போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் குடியிருந்து வரும்,இவர் ஆன்லைன் மூலம் ஜவுளி வர்த்தகம் செய்து வந்துள்ளார். இவரை, தொடர்பு கொண்ட கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் ஜவுளி வர்த்தகம் குறித்து விசாரித்ததாக கூறப்படுகிறது.அவருக்கு ஆன்லைன் வர்த்தகம் மூலம் பொருட்கள் வாங்கித் தருவதாக,ஹரிஹரசுதன் உறுதியளித்ததாகவும், இதற்காக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அந்த நபரிடம் ரூ.10 லட்சத்தை ஆன்லைன் மூலம் பெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.பின், பணத்தை பெற்று கொண்ட ஹரிஹரசுதன், நீண்ட நாட்கள் ஆகியும் ஜவுளிப் பொருட்களைஅனுப்பமால் இருத்ததாகவும்,இதுகுறித்து அந்த நபர் கேட்ட போது, கொரோனா தொற்று காரணமாக ஜவுளி உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளதால் பொருட்களை, தற்போது வழங்க முடியாது, என தெரிவித்துள்ளார்.

தொடர் தாமதத்தால், பணத்தை திரும்ப தரும்படி கேட்டதற்கு ஹரிஹரசுதன் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில் கர்நாடகா போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், நேற்று கோவை வந்த கர்நாடகா போலீசார் ஹரிஹரசுதனை கைது செய்து, காசோலை மோசடி விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி,அவரை கைது செய்து கர்நாடகா அழைத்து சென்றனர்.

மேலும் படிக்க