• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் மோசடி வழக்கில் கைது

August 29, 2020 தண்டோரா குழு

கோவையை சேர்ந்த காங்கிரஸ் இளைஞரணி மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன் (35) என்பவரை பண மோசடி வழக்கில், கர்நாடக போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் குடியிருந்து வரும்,இவர் ஆன்லைன் மூலம் ஜவுளி வர்த்தகம் செய்து வந்துள்ளார். இவரை, தொடர்பு கொண்ட கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் ஜவுளி வர்த்தகம் குறித்து விசாரித்ததாக கூறப்படுகிறது.அவருக்கு ஆன்லைன் வர்த்தகம் மூலம் பொருட்கள் வாங்கித் தருவதாக,ஹரிஹரசுதன் உறுதியளித்ததாகவும், இதற்காக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அந்த நபரிடம் ரூ.10 லட்சத்தை ஆன்லைன் மூலம் பெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.பின், பணத்தை பெற்று கொண்ட ஹரிஹரசுதன், நீண்ட நாட்கள் ஆகியும் ஜவுளிப் பொருட்களைஅனுப்பமால் இருத்ததாகவும்,இதுகுறித்து அந்த நபர் கேட்ட போது, கொரோனா தொற்று காரணமாக ஜவுளி உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளதால் பொருட்களை, தற்போது வழங்க முடியாது, என தெரிவித்துள்ளார்.

தொடர் தாமதத்தால், பணத்தை திரும்ப தரும்படி கேட்டதற்கு ஹரிஹரசுதன் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில் கர்நாடகா போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், நேற்று கோவை வந்த கர்நாடகா போலீசார் ஹரிஹரசுதனை கைது செய்து, காசோலை மோசடி விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி,அவரை கைது செய்து கர்நாடகா அழைத்து சென்றனர்.

மேலும் படிக்க