• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

August 28, 2020 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி அலுவலகத்தை
அல் அமீன் ஐக்கிய ஜமாத் அமைப்பினர் முற்றுகையிட்டனர்.

கோவை உக்கடத்தில் அல் அமீன் காலனி பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகளை அகற்றி சாலை அமைத்து தர வேண்டுமென பல நாட்களாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. எனினும் கோரிக்கைகள் இன்றுவரை நிறைவேற்றப்படாத நிலையில் அல் அமீன் ஐக்கிய ஜமாத் அமைப்பினர் 50க்கும் மேற்பட்டோர் கோவை மாநகராட்சி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர்.

இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் தூங்குகிறதா என்றும் கேள்விகளை எழுப்பி முழக்கமிட்டனர். தங்களது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படவில்லை என்றால் ஊராட்சித்துறை அமைச்சரின் வீட்டை முற்றுகையிட தயாராக இருக்கிறோம் என்றும் முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் படிக்க