August 28, 2020
தண்டோரா குழு
ஈ பாக்ஸின் கல்லூரிகளின் முதல் ஸ்டார்ட்-அப் ஸ்டுடியோ “தி ஸ்டோரி டெல்லிங் கம்பெனி” தொடங்கப்பட்டது.
ஆன்லைன் மூலம் ஈ-பாக்ஸ் கல்லூரிகள் சார்பாக இந்த விழா நடந்தது. ஸ்டோரிப் டெல்லிங் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சித்தார்த்த சத்பதி இந்த நிறுவனத்தை திறந்து வைத்தார்.
அப்போது அவர் தனது தொடக்க உரையில்,
நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் கதை சொல்பவர்கள், இந்த கதைகள் நாம் யார், என்ன செய்கிறோம் என்பது பற்றி நிறைய சொல்கின்றன. நாம் நம்மை வழிநடத்தும் விதம், காரியங்களைச் செய்வதில்,விஷயங்களைக் கண்டுபிடிப்பதில்,மக்களுடன் இணைவது, நாம் உருவாக்கும் அமைப்பு, இந்தக் கதைகளைப் புரிந்துகொண்டு,நம் வாழ்க்கையின் பெரிய குறிக்கோளுடன்,கதை சொல்லலில் நாம் என்ன செய்கிறோம் என்பதை இந்த நிறுவனம் செய்யும். தனிநபர்களாக நம்மை எவ்வாறு வளர்த்துக்கொள்வதையும் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம்.நாங்கள் ஈ-பாக்ஸுடன் தொடக்க அமைப்பின் ஒரு பகுதியாக செயல்படுகிறோம் எனவே மிகவும் கவர்ச்சிகரமான பயணத்திற்கு மிகவும் வரவேற்கத்தக்க ஒரு அற்புதமான கதை சொல்லும் அனுபவத்தை நீங்கள் பயன்படுத்தும்போது நீங்கள் நல்ல பயன் பெற வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் தலைமை கற்றல் அதிகாரி டாக்டர் பாலமுருகன், அனைவரையும் வரவேற்றார். தலைமை கண்டுபிடிப்பு அதிகாரி டாக்டர் பிரதீப் குமார் ஸ்டார்ட்அப் ஸ்டுடியோக்களுக்குப் பின்னால் உள்ள நோக்கத்தை பகிர்ந்து கொண்டார். ஸ்டார்ட்அப் ஸ்டுடியோ மாடல் பற்றி பட்டயகணக்காளர் கார்த்திகேயன் கங்காதரன் பேசினார். மாணவர்களை தொழில் முனைவோர்களாக இ-பாக்ஸ் கல்லூரிகளின் முதல்வர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அறிமுகம் செய்தார்.
ஈ-பாக்ஸ் கல்லூரிகளைச் சேர்ந்த காவ்யா, ஹரிஹரன், சென்பகம், சவுந்தர்யா மற்றும் வினோத் குமார் ஆகிய ஐந்து மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.நிறைவாக ஈ-பாக்ஸ் கல்லூரிகளின் இயக்குநர் டாக்டர் எஸ்.ராம்குமார் நன்றி கூறினார்.