August 27, 2020
தண்டோரா குழு
கோவையில் வீடுகளுக்குள் புகுந்து செல்போன்களை திருடி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் அடுக்குமாடிக்குடியிருப்புகளில் வைத்திருந்த செல்போன்கள் திருடுபோவதாக போலீசாருக்கு புகார் வந்தது.இதனைத் தொடர்ந்து, பட்டப்பகலில் வீடுகளுக்குள் தைரியமாக நுழைந்து செல்போன்களை திருடிச்சென்ற கொள்ளையனை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
அதன்படி, சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவரைப்பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது,அவர் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவீந்திர நாதன் என்பவரது மகன் நவீந்திர நாதன் என்பது தெரியவந்தது.மேலும், கோவையில் வெவ்வேறு வீடுகளில் செல்போன் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 4 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.