• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் குரங்குகள் அட்டகாசம் – வனத்துறையினர் கூண்டு வைப்பு

August 25, 2020 தண்டோரா குழு

சாய்பாபா காலனி பகுதிகளில் குரங்குகளை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.

கோவை சாய்பாபா காலனி பகுதி ரகுபதி லே அவுட் பகுதியில் கடந்த சில தினங்களாக பத்திற்கும் மேற்பட்ட குரங்குகள் அட்டகாசம் செய்து வந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் நான்கைந்து குரங்குகள் அந்த பகுதியிலுள்ள நாய் ஒன்றினை கடிக்க வந்ததாக கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த வனத்துறையினர் குரங்கினை பிடிப்பதற்கு ஒரு வீட்டிற்குள் கூண்டு வைத்துள்ளனர்.ஊரடங்கு காலம் என்பதால் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத காரணத்தினால் குரங்குகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.குரங்குகள் அடிக்கடி வந்து அங்குள்ள உணவுப் பொருட்கள் போன்றவற்றை எடுத்துச் செல்வதும் துணிகளை எடுத்து செல்வதுமாக இருந்தது சில நேரத்தில் அப்பகுதி மக்களை தாக்க முயன்றதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க