• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் விபத்துக்களால் உயிரிழப்போர் எண்ணிக்கை 57 % ஆக குறைவு

August 25, 2020 தண்டோரா குழு

கோவையில் சாலை விபத்துக்களால் உயிரிழப்போர் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் 57 சதவீதம் குறைந்துள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

கோவை மாநகரில் கடந்த ஆண்டு மொத்தம் 621 சாலை விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் 23ம் தேதி வரை மொத்தமாக 362 விபத்து வழக்குகள் மட்டும் பதிவாகியுள்ளது. இது கடந்தாண்டை காட்டிலும் 42 சதவீதம் குறைவு. கடந்தாண்டு சாலை விபத்துக்களில் சிக்கி 75 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தாண்டு ஆக்ஸ்ட் 23ம் தேதி வரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்.இது கடந்தாண்டை காட்டிலும் 57 சதவீதம் குறைவு.

மேலும், இந்தாண்டு, ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 4 லட்சத்து 48 ஆயிரத்து 520 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இது கடந்தாண்டை காட்டிலும் 162 சதவீதம் அதிகம்.அதேபோல்,மது போதையில் வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் மொத்தம் 89 ஆயிரத்து 392 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இது கடந்தாண்டை காட்டிலும் 190 சதவீதம் அதிகம் ஆகும்.

இவ்வாறு சுமித்சரண் கூறினார்.

மேலும் படிக்க