• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பட்டியலில் இன மக்களின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை காக்க மனு

August 24, 2020 தண்டோரா குழு

பட்டியலில் இன மக்களின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டி பாஜகவினர் மனு அளித்துள்ளனர்.

பட்டியலின மாணவ மாணவிகளின் அழகான தேசிய பட்டியல் இன ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பட்டியலின மாணவ மாணவிகளின் சேர்க்கை உறுதிப்படுத்த கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் அதேபோல் தேசிய ஆணையத்தின் வழிகாட்டுதல் நெறிமுறை கூட்டம் மற்றும் மற்ற குழு கூட்டங்களையும் நடத்திட வேண்டுமென்றும் பட்டியலின மாணவ மாணவர்கள் பாதிப்படையாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்றும் கோவை மாநகர பாஜக மாவட்ட எஸ்சி அணியின் தலைவர் விவேக் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பட்டியலின மாணவ மாணவிகளின் பாதிப்பு அடையாமல் பள்ளி சேர்க்கை கல்லூரி சேர்க்கை காலங்களில் மாவட்ட ஆதிதிராவிடர் நல குழுக்கள் மூலம் ஆய்வு செய்து பட்டியலின மாணவ மாணவிகள் பாதிப்படையாத வண்ணம் உதவி செய்ய வேண்டும் என்றும் கடந்த ஆண்டு குழுக்கள் மூலம் ஆய்வு பணி செய்யவில்லை என்றும் இந்த ஆண்டு அவ்வாறு இல்லாமல் அனைத்து குழுக்களும் முறையாக செயல்பட்டு பட்டியலின மேம்பாட்டிற்காக உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

மேலும் படிக்க