• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாஜக சார்பில் பொதுமக்கள் குறை தீர்ப்பு அலைபேசி சேவை

August 22, 2020 தண்டோரா குழு

கோவையில் பா.ஜ.க.ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி பிரிவு சார்பாக பொதுமக்கள் குறை தீர்ப்பு அலைபேசி சேவை துவங்கப்பட்டது.

கோவை மாநகர் மாவட்ட ப.ஜ.க.அலுவலகத்தில் ஊரக மற்றும் நகர்புற வளர்ச்சி பிரிவு சார்பாக பொதுமக்கள் குறை தீர்ப்பு அலை பேசி சேவை துவங்கப்பட்டது. இதற்கான விழாவில் மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் நந்தகுமார் கலந்து கொண்டு அலை பேசி சேவையை துவக்கி வைத்தார்.

பொதுமக்கள் தங்களது பகுதியில் உள்ள குடிநீர் ,சாக்கடை பிரச்னைகள் மற்றும் ,மின் இணைப்பு துண்டிப்பு போன்ற அன்றாடம் பிரச்னைகளை இந்த எண்ணில் தொடர்பு கொண்டால் அவர்களது பிரச்னை சம்பந்தப்பட்ட துறையினரை தொடர்பு குறைகளை தீர்க்க ஏற்பாடு செய்ய வசதியாக இந்த சேவை துவங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட தலைவர் பேசுகையில்,

இந்த சேவை பொதிமக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் வகையில் இருக்கும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க.ஊரக மற்றும் நகர்புற வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் புல்லட் சதீஷ்,செயலாளர் அபினவ்,ராஜேந்திர கெமரன், வழக்கறிஞர் மோகன்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க