• Download mobile app
06 Jun 2025, FridayEdition - 3404
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

வழக்கத்தை விட பூக்கள் விற்பனை மந்தம் – கோவையில் பூ வியாபாரிகள் வேதனை

August 21, 2020 தண்டோரா குழு

ஓணம்,மற்றும் விநாயகர் சதுர்த்தி சீஸனை முன்னிட்டு வழக்கத்தை விட பூக்கள் விற்பனை மந்தமாக இருப்பதாக கோவையில் பூ வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த காலங்களில் பூக்களின் விலை வழக்கமாக அதிகரித்து காணப்படும். இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. கொரோனா கால ஊரடங்கால் பொது இடங்களில் விநாயகர் சிலையை வைக்க அரசு மறுத்துள்ள நிலையில், பொது மக்கள், வீடுகளிலேயே விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபட உள்ளதால் குட்டி விநாயகர் சிலைகள் விற்பனை கோவையில் சூடு பிடித்துள்ளது. அதே நேரத்தில் கொரோனா கால ஊரடங்கால் பூக்கள் விற்பனை வழக்கத்தை விட மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கோவை மாவட்ட மலர் வியாபாரிகள் சங்க பொருளாளர் அய்யப்பன் கூறுகையில்,

கோவை பூ மார்க்கெட்டுக்கு தினமும் மல்லிகை, ஜாதி மல்லி, முல்லை உள்பட பல்வேறு வகையான பூக்கள் மற்றும் சம்பங்கி, செவ்வந்தி, மரிக்கொழுந்து,அரளி, துளசி உள்ளிட்டவை வெளி இடங்களில் சாதாரணமாக வருவதை காட்டிலும் குறைவான வரத்தே இருப்பதாகவும், மேலும் வழக்கத்தை விட பூக்கள் வாங்க பொதுமக்கள் இந்த வருடம் அதிக ஆர்வம் காட்டாத காரணத்தால் வியாபாரம் மந்தமாக இருப்பதாக வேதனை தெரிவித்தார்.

கேரளாவிலும் ஓணம் பண்டிகை தற்போது கரோனா பாதிப்பால் கொண்டாட்டம் தவிர்க்கப்பட்டு வீடுகளில் எளிய முறையில் கொண்டாட முடிவு செய்துள்ளதாலும் விற்பனை சரிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க