• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2 மணி நேரம் தாமதமாக கடையை திறக்க போவதாக டாஸ்மாக் ஊழியர்கள் கூட்டமைப்பினர் அறிவிப்பு

August 21, 2020 தண்டோரா குழு

ஐந்து நாட்களாக டாஸ்மாக் ஊழியர்கள் கூட்டமைப்பினர் நடத்திய தொடர் முழக்கப் போராட்டம் நிறைவு பெற்ற நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த கட்டமாக 2 மணி நேரம் தாமதமாக கடையை திறக்க போவதாக கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

டாஸ்மாக் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும், தொற்றால் உயிரிழக்கும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். பணியின்போது உயிரிழக்கும் ஊழியர்களின் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும்,கடைகளில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும், இதில் அத்து மீறல்கள் தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 17 ந்தேதி முதல் டாஸ்மாக் ஊழியர்கள் அனைத்து சங்க கூட்டமைப்பினர் மாநில அளவில் கடை முன் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன்படி, இன்று கோவை நஞ்சுண்டாபுரம் சாலை,மற்றும் பங்கஜா மில் சாலையில் தொடர் முழக்க போராட்டத்தின் ஐந்தாவது நாள் போராட்டம் நடைபெற்றது.மத்திய மாநில SC ST அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மணிமாறன்,தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்க மாநில செயலாளர் மதியழகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில், பா.ம.க தொழிற்சங்க மாநில துணை செயலாளர் வேலுமணி உட்பட இதில் அனைத்து சங்க கூட்டமைப்பினர் கலந்து கொண்டு தங்களது 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பினர். ஐந்து நாட்கள் போராட்டம் நிறைவு பெற்ற நிலையில் தொடர்ந்து 2 மணி நேரம் கடைகளை தாமதமாக திறக்க போவதாக டாஸ் மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் மணிகண்டன், ரமேஷ்பாபு,செந்தாமரை,பாலசஞ்சீவி உட்பட அனைத்துஙசங்க கூட்டமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க