August 19, 2020
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி பள்ளியின் மாணவர் சேர்க்கை படிவத்தில்‘3வது மொழியாக இந்தி படிக்க விருப்பமா?’- என்ற கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழகத்தில் அரசு அரசு உதவிபெறும் பள்ளிகளில் உட்பட அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு ஆறாம் வகுப்பு ஒன்பதாம் வகுப்பு மாணவர் சேர்க்கை நேற்று துவங்கியது.இதற்கிடையில், தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்த நிலையில் 3வது மொழியாக இந்தி படிக்க விருப்பமா? என கோவை மாநகராட்சி பள்ளியின் மாணவர் சேர்க்கை படிவத்தில் இடம்பெற்ற கேள்வியால் இன்று சர்ச்சை எழுந்துள்ளது.