• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீட் தேர்வுக்கு பயந்து கோவை மாணவி தூக்கிட்டு தற்கொலை

August 19, 2020 தண்டோரா குழு

நீட் தேர்வுக்கு பயந்து கோவையில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை ஆர்எஸ் புரம் வெங்கடசாமி சாலை(கிழக்கு) பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வரும் ரவிச்சந்திரனின் மகள் சுபஸ்ரீ (19). இவர் கடந்த இரண்டு வருடமாக நீட் தேர்வுக்காக தனியார் அகாடமியில் பயின்று வருகிறார். இந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதம் நீட் தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்புகள் வெளியானதையடுத்து மனவேதனைக்கு உள்ளானார்.

இதைத்தொடர்ந்து நீட் தேர்வு அச்சத்தில் தற்கொலைக்கும் முடிவு செய்த அவர் நேற்று மாலை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைதொடர்ந்து சுபஸ்ரீயின் தாயார் சுமதி அளித்த புகாரின் பேரில் ஆர் எஸ் புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் பிரேதத்தை கைப்பற்றி தற்கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வு பயத்தில் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க