• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேசியகல்விக் கொள்கைக்கு எதிராக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம் !

August 18, 2020 தண்டோரா குழு

தேசிகல்விக் கொள்கைக்கு எதிராக
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக கேம்பஸ் ஃப்ரண்ட் நாடு முழுவதும் பல்வேறு பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக கோவை கரும்புக்கடையில் இன்று அவ்வமைப்பின் மாவட்ட தலைவர் அபுதாஹீர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ் மாநில பொதுச்செயலாளர் க.அஷ்ரப் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாணவர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

இதில் தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வரும் மத்திய அரசானது கல்வியில் காவியை புகுத்தும் வேலையை கைவிடவேண்டும், ஒருபோதும் தேசிகல்விக் கொள்கையை ஒருபோதும் ஏற்க முடியாது எனவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இறுதியாக மாவட்ட பொருளாளர் ஜமீல் ஹாரிஸ் நிகழ்த்தினார்.

மேலும் படிக்க