• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை முன்பாக ஆர்ப்பாட்டம்

August 17, 2020 தண்டோரா குழு

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்களின் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக கோவையில் டாஸ்மாக் கடை முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் LPF, மத்திய மாநில எஸ்.சி எஸ் டி பிரிவு,பா.ம.க தொழிற்சங்கம் உட்பட அனைத்து சங்க கூட்டமைப்பினர் சார்பாக டாஸ்மாக் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்க போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை சவுரி பாளையம்,மற்றும் புலிய குளம் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடை முன்பாக தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய மாநிலSC ST அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்ற இதில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், மருத்துவ செலவினை டாஸ்மாக் நிர்வாகம் முழுமையாக ஏற்க வேண்டும், கொரோனாவால் உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சமூக விலகலை பின்பற்றி முக கவசம் அணிந்தபடி கோசங்களை எழுப்பினர். இதில் பாட்டாளி மக்கள் கட்சி தொழிற்சங்க செயலாளர் வேலுமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க