• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஆவரம்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் சுதந்திர தின விழா

August 15, 2020 தண்டோரா குழு

கோவை ஆவரம்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 74வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

74 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக கோவை ஆவரம்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகத்தின் நிறுவன தலைவர் முத்துராமன் சிங்கப் பெருமாள் அவர்களின் பரிந்துரைப்படி பொதுச்செயலாளர் தவத்திரு ஈஸ்வர சுவாமிகள் மற்றும் கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர் விஸ்மயா வேணுகோபால் ஆகியோர் பங்கேற்று தேசிய கொடியேற்றி வைத்தனர்.

பின்னர் பள்ளி மாணவ மாணவர்களுக்கு முக கவசம் மற்றும் நோட்டு புத்தகங்கள் இனிப்புகளை வழங்கினர். இவ்விழாவில் கழக கொள்கை பரப்புச் செயலாளர் சாந்தினி வேணுகோபால் மற்றும் கழக செயலாளர் வாசுதேவன், கோவை மாவட்ட செயலாளர் ஜெகதீஷ் செல்வராஜ், கழக நிர்வாகிகள் சங்கரன், உதயகுமார், சுந்தர் ராஜன், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் சுமதி, சிங்கை தொகுதி மகளிர் அணிச் செயலாளர் நீலவேணி,சூலூர் சட்டமன்ற மகளிர் அணிச் செயலாளர் சாந்தி, தொண்டாமுத்தூர் மகளிர் அணிச் செயலாளர் இந்துமதி,அவிநாசி சட்டமன்ற செயலாளர் ஜீவிதா மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க