• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தடையை மீறி 1.5.லட்சம் விநாயகர் சிலை வைக்கப்படும் – காடேஸ்வரா சுப்பிரமணியம்

August 13, 2020 தண்டோரா குழு

விநாயகர் சதுர்த்தியன்று தமிழக அரசின் தடையை மீறி மாநிலம் முழுவதும் ஒன்றரை இலட்சம் இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்படும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

கோவை காட்டூர் பகுதியில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் அவ்வமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்தை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இந்த தடையினால் விநாயகர் சிலை செய்யும் பொம்மை செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் எனவும், 99 சதவீத மக்களுக்கு கடவுள் நம்பிக்கை உள்ள நிலையில் விநாயகர் வழிபாடு மூலம் மக்களுக்கு தைரியம் வரும்.அரசியல் காரணத்திற்காக சிறுபான்மை ஓட்டுக்காக தடை விதித்துள்ளனர். நக்சலைட் சிந்தனையுள்ள அதிகாரிகள் முதல்வருக்கு தவறான ஆலோசணை வழங்கி தடை விதித்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் எனவும், இல்லையெனில் அரசின் தடையை மீறி தமிழ்நாடு முழுவதும் ஒன்றரை இலட்சம் இடங்களில் விநாயகர் சிலை வைப்போம் எனவும் அவர் தெரிவித்தார். கொரோனா பரவலை தடுக்க வேண்டும் என்றால் டாஸ்மாக்கிற்கு ஏன் தடை விதிக்கவில்லை எனக் கேள்வி எழுப்பிய அவர், டாஸ்மாக்கிற்கு பாதுகாப்பு கொடுப்பது போல, விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பாதுகாப்பு வழங்கலாம் என தெரிவித்தார்.

மேலும் படிக்க