• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ரயில்வே காவல் துறையினர் மோப்பநாய் உதவியுடன் சோதனை

August 13, 2020 தண்டோரா குழு

கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துறையினர் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு சோதனைக் கருவிகள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

இதன் பிறகு கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே டிஎஸ்பி அண்ணாதுரை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை ரயில்வே உட்கோட்டத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.ரயில்வே காவலர்கள், ரயில்வே பாதுகாப்பு படை,மாநகர காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 475 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் மோப்பநாய், வெடிகுண்டு நிபுணர்கள் ரயில் பாதைகள் மற்றும் ரயில் நிலையங்களில் முழு நேரமும் தணிக்கை பணியில் ஈடுபட்டுள்ளனர்.தண்டவாளத்தில் செல்பவர்கள் மீதும், தண்டவாளத்தில் கல் வைப்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.ரயில் தண்டவாளங்களுக்கு அருகே மது அருந்துவது உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க