• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொரோனா காலத்தில் சிறை கைதிகளுக்கு யோகா கற்றுக்கொடுக்கும் ஈஷா!

August 11, 2020 தண்டோரா குழு

கொரோனா பாதிப்பு மிகுந்த இந்த சூழலில் சிறை கைதிகளின் உடல் மற்றும் மனநலனை மேம்படுத்தும் விதமாக ஈஷா யோகா மையம் ஆன்லைன் முறையில் அவர்களுக்கு பிரத்யேக யோகா வகுப்புகளை நடத்தி வருகிறது.

தமிழக சிறைத் துறை உயர் அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று, சென்னை, வேலூர், கடலூர், திருச்சி, சேலம், மதுரை, பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் இருக்கும் அனைத்து மத்திய சிறைச்சாலைகளிலும் இலவச ஆன்லைன் யோகா வகுப்புகள் ஜூலை 28-ம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது.

சத்குருவால் பயிற்றுவிக்கப்பட்ட ஈஷா யோகா ஆசிரியர்கள் இவ்வகுப்புகளை ஒருங்கிணைத்து நடத்துகின்றனர். இதில் யோக நமஸ்காரம், சிம்ம க்ரியா, ஈஷா க்ரியா போன்ற யோக பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது. சிம்ம க்ரியா பயிற்சியானது நோய் எதிர்ப்பு சக்தியையும் நுரையீரல் திறனையும் மேம்படுத்துவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். ஈஷா க்ரியா பயிற்சி உடலளவிலும், மனதளவிலும் அமைதியாகவும், சமநிலையாகவும் இருப்பதற்கும் துணை புரிகிறது. மேலும், மன அழுத்தத்தை குறைப்பதற்கும் இப்பயிற்சிகள் தீர்வாக இருக்கும்.கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, சமூக இடைவெளியுடன் தனித் தனிக் குழுக்களாக இவ்வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதன்மூலம், தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ஆண் மற்றும் பெண் கைதிகள் பயன்பெற்று வருகின்றனர். அத்துடன் சிறை வார்டன்கள் மற்றும் பணியாளர்களும் இவ்வகுப்பில் பங்கேற்று பயன் பெறுகின்றனர்.

ஈஷா யோகா மையமானது கடந்த 28 ஆண்டுகளாக தமிழக சிறைச்சாலைகளில் இலவச யோகா வகுப்புகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க