• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போருக்கு செல்ல அனுமதி அளிக்க வேண்டும் – மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பள்ளி ஆசிரியர் !

August 10, 2020 தண்டோரா குழு

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அரசு. இவர் கோவை காளம்பாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இன்று கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.

அதில் எல்லையில் போரில் கலந்து கொள்ள தன்னை அனுமதிக்க வேண்டும் என கேட்டு ஆட்சியரிடம் மனு அளித்ததாக தெரிவித்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இந்தியா சீனா இடையே போர் ஏற்பட்டால் அதில் தான் கலந்து கொண்டு உயிர் தியாகம் செய்ய தயாராக இருப்பதாகவும் தன்னை இராணுவத்தினருடன் இணைந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்றார். இந்தியா சீனாவிற்கு இடையே போர் ஏற்பட்டால் இந்தியாவின் தென்கோடியில் உள்ள தமிழகத்தின் கோவை மாவட்டத்திலிருந்து முதல் ஆளாக லடாக் பகுதிக்கு சென்று நமது இந்திய ராணுவ வீரர்களுடன் சேர்ந்து போர் புரிய தான் விரும்புவதாக கூறிய அவர் பள்ளிப்பருவம் முதல் கல்லூரி வரை தேசிய மாணவர் படையில் சேர்ந்து பயிற்சி பெற்று உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க