• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இரவு நேரத்திலும் திருடர்களை கண்காணிக்க ட்ரோன் கேமரா

August 9, 2020 தண்டோரா குழு

கோவையில் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன இதனை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இரவு நேரத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருவதால் இரவு நேரத்தில் டிரோன் கேமராக்களை பறக்கவிட காவல்துறையினர் முடிவெடுத்துள்ளனர்.

கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் சிறு முன்னோட்ட காட்சிகளை ஆணையர் சுமித் சரண் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த இரவு நேர டிரோன் கேமராக்கள் முதலில் சிங்காநல்லூர் பகுதியில் பறக்க விடப்பட உள்ளன. கோவையில் டிரவுசர் கும்பல் சிங்காநல்லூர் பகுதியில் அதிகமாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அதில் ஒருவனை நேற்று சிங்காநல்லூர் போலீஸார் பிடித்தனர். எனவே சிங்காநல்லூர் பகுதியில் முதலில் இந்த டிரோன் கேமராக்கள் பறக்கவிடப்பட உள்ளது.

மேலும் படிக்க