• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஒரு டவுசர் கொள்ளையன் சிக்கினான் !

August 8, 2020 தண்டோரா குழு

கோவையில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த டவுசர் கொள்ளையர்களில் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் முகத்தை மூடிக்கொண்டு டவுசருடன் கும்பலுடன் கொள்ளையர்கள் சுற்றி திரியும் சிசிடிவி காட்சிகள் மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.இதற்கிடையில்,நேற்று சிங்காநல்லூரில் இவர்கள் கொள்ளையடிக்க முயற்சித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகின. அதில் ஒரு கொள்ளையனின் முகம் தெளிவாக கேமராவில் பதிவானது.

இதையடுத்து,இது குறித்து தனிபடை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில், இன்று சிங்காநல்லூர் போலிசார் டவுசர் கொள்ளையர்களில் வீரமணி என்ற ஒருவரை கைது செய்துள்ளனர்.தற்போது அவனிடம் போலீசார்தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க