• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மரத்தில் மோதிய கார் – சம்பவ இடத்தில் நான்கு பேர் உயிரிழப்பு

August 7, 2020 தண்டோரா குழு

கோவை தடாகம் பகுதி காளையனூரில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் இளைஞர்கள் 5 பேர் காரில் சென்று கொண்டிருக்கும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் எதிர்புறத்தில் இருந்த சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியது இதில் இளைஞர்கள் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தடாகம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தடாகம் காவல்துறையினர் நான்கு பேரின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தடாகம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அவர்களின் பெயர்கள் இந்திரேஸ்(22), கார்த்திக் ராஜு(22), பிரதேஸ்(23),மொகன் ஹரி(23), மணிகண்டன்(22) என்று தெரிய வந்துள்ளது. ஊரடங்கு அமலில் இருக்கும் பொழுது இந்த விபத்து நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க