• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாணவர்களின் சமுதாய நீதியை காக்க பாடுபடுவோம் : ஓ.பி.சி சமுதாயங்களின் கூட்டமைப்பு

August 5, 2020 தண்டோரா குழு

ஓ.பி.சி மாணவர்களின் சமூக நீதியை நிலைநாட்டும் பொருட்டு இட ஒதுக்கீடு வரம்புக்குட்பட்ட ஓபிசி எஸ்சி எஸ்டி சமூகங்களின் கூட்டு நடவடிக்கைகளையும் அடுத்ததடுத்த முயற்சிகளில் செயல்படுவோம் என்று
ஓ.பி.சி சமுதாயங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

அனைத்து ஓபிசி சமுதாய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கூட்டு அறிக்கை வெளியீட்டு விழா கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று நடைபெற்றது. மருத்துவக் கல்வியில் ஓபிசி சமுதாய மாணவர்களுக்கான சமூகநீதி மறுக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. எனவும், இந்த நிலையில் சமூக நீதிக்கான சட்ட போராட்டங்களை நடத்திய அனைத்து இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் ஓபிசி சமுதாய இயக்கங்களின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என கோவையில் பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வாயிலாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த கூட்டத்தின் வாயிலாக மருத்துவ உயர்கல்வியில், இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டிலேயே நடைமுறைப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஓபிசி இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் முறை நடப்பு கல்வியாண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மத்திய அரசை எங்கள் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் என இந்த கூட்டத்தின் வாயிலாக வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து ஓபிசி மாணவர்கள் சமூக நீதியை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக முதல்வரை வலியுறுத்தி கேட்பதாக கோரிக்கை விடுத்துள்ளனர் சமூக நீதியை நிலைநாட்டும் பொருட்டு இட ஒதுக்கீடு வரம்புக்குட்பட்ட ஓபிசி எஸ்சி எஸ்டி சமூகங்களின் கூட்டு நடவடிக்கைகளையும் அடுத்த கட்ட முயற்சிகளில் இந்தக் கூட்டமைப்பு செயல்படும் என்றும் இந்த கூட்டத்தின் வாயிலாக உறுதி மொழி ஏற்றனர்.

மேலும் படிக்க