• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் இயங்க அனுமதி

August 5, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் இயங்க முதல்வர் பழனிசாமி அனுமதி
வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டன. இதையடுத்து, தளர்வுகளுடன் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில், உடற்பயிற்சி கூடங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு உடற்பயிற்சி உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர் சங்கத்தினர் சார்பில் அதன் நிர்வாகிகள், தமிழ்நாட்டில் உள்ள உடற்பயிற்சி கூடங்களை திறக்க வேண்டுமென முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று முதல்வர் பழனிசாமி ஏற்று ஆணை பிறப்பதித்துள்ளார்.

மத்திய அரசு தனியார் உடற்பயிற்சிக் கூடங்களை திறக்க ஆகஸ்ட் 5ந்தேதி முதல் அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழ்நாட்டிலுள்ள தனியார் உடற்பயிற்சிக் கூடங்கள், 50 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் 10.8.2020 முதல் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மேலும், இதற்கான நிலையான வழிகாட்டு செயல் முறைகள் தனியாக வெளியிடப்படும்.
அவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க