• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆடி பெருக்கு பேரூரில் தற்பணம் செய்ய தடை – முதல் முறையாக வெரிச்சோடிய பேரூர் படித்துறை

August 2, 2020 தண்டோரா குழு

கொரோனா ஊரடங்கால் ஆடி பெருக்கை முன்னிட்டு பேரூர் படித்துறை மற்றும் சுற்றுவட்டார பொது இடங்களில் இறந்தவர்களுக்கான தற்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் முழு ஊரடங்கு அமலானதால் மாவட்டம் முழுவதும் வெரிச்சோடி காணப்பட்டது.

ஆடி பெருக்கு ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சயாக நடைபெறும். அரசு விடுமுறை விடப்படுவதால் எப்போது கோவில்கள் மற்றும் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு இறந்த முன்னோர்களை வணங்குவது, படையலிடுவது, மற்றும் கோவை பேரூர் படித்துறை மற்றும் அருகே உள்ள தனியார் திருமணம் மண்டபங்களில் ஒவ்வொரு ஆண்டும் தற்பணம் செய்யும் நிகழ்வு நடைபெறும்.

இந்நிலையில், இந்த ஆண்டு கொரோனா பொது முடக்கம் அமலில் உள்ளதால், பேரூர் படித்துறை மற்றும் தனியார் திருமணம் மண்டபங்களில் இறந்தவர்கள் தற்பணம் செய்யவும், பொது இடங்களில் கூடவும் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமலானதால் எப்போது பொது இடங்களில் மக்கள் கூட்டமாக காணப்படும் அனைத்து பகுதிகளில் முதல் முறையாக வெரிச்சோடி காணப்பட்டது.

மேலும் படிக்க