• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சுற்றுசூழல் தாக்க மதீப்பீடு வரைவு அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

July 31, 2020 தண்டோரா குழு

சுற்றுசூழல் தாக்க மதீப்பீடு வரைவு அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி அனைத்து முற்போக்கு இயக்கத்தினர் சார்பாக கோவை காந்திபுரம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு சுற்றுசூழல் பாதுகாப்பு சட்டம் 1986 யில் மாற்றம் செய்து புதிய சுற்றுசூழல் கொள்கையை உருவாக்கி சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு -2020 என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதற்கு தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் சுற்றுசூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவையில் முற்போக்கு இயக்கங்கள் சார்பாக புதிய சட்ட வரைவை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காந்திபுரம் பெரியார் சிலை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பினர். மேலும் இந்த சட்டத்தை அமல்படுத்தினால் சுற்றுசூழலுக்கும் மனிதர்களுக்கும் அதிக பாதிப்பு ஏற்படும் எனவும் பெரும் முதலாளிகள் பயன்பெறும் வகையில் இருப்பதுடன் இந்த வித அனுமதியும் பெறாமல் தொழிற்சாலைகள்,சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செய்ய வழி வகுக்கும் எனவும் குற்றம்சாட்டினர். எனவே இந்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர கூடாது எனவும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் படிக்க