• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு !

July 30, 2020 தண்டோரா குழு

கோவையில் அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவையினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளர்,தேவேந்திர குலத்தான், உள்ளிட்ட 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தங்களது சமூகத்தின் பெயரை, ‘தேவேந்திர குல வேளாளர்‘ என மாற்றி அரசாணை பிறப்பிக்க வேண்டும்.பட்டியலினத்தவர் பிரிவிலிருந்து தேவேந்திர குல வேளாளர்களை நீக்கி, இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் தமிழக அரசு மலையாள சமூக இரு சமூக மக்களை BC பட்டியிலில் சேர்க்க உத்தரவு இட்டிருந்தது.

இந்நிலையில் தொடர்ந்து போராடி வரும் தேவேந்திர குல வேளாளர்களின் கோரிக்கையை தமிழக முதல்வர் புறக்கணிப்பதாக கூறி அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவையினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட முயன்றனர். உடனடியாக வந்த காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவ்வமைப்பின் தலைவர் மனுநீதி சோழன்,
தொடர்ந்து எங்களின் கோரிக்கை நிராகரிக்கபடுவதாகவும்,தேவேந்திர குல வேளாள மக்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என கேட்டு கொண்டார். கொரோனா பரவல் கோவையில் அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.

மேலும் படிக்க