• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெரியார் சிலை மீது காவி சாயம் பூசியவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது

July 29, 2020 தண்டோரா குழு

கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசியவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்திரவிடப்பட்டுள்ளது.

கோவை சுந்தராபுரத்தில் தந்தை பெரியார் சிலை மீது மர்ம நபர் ஒருவர் காவி சாயம் பூசி சென்றார்.இது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளியை போலீசார் தேடி வந்த நிலையில் பாரத் சேனா அமைப்பின் நிர்வாகி அருண்கிருஷ்ணன் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இன்று அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாநகர ஆணையர் சுமித் சரண் உத்திரவிட்டார்.இதற்கான உத்தரவு நகலை நேற்று மாலை கோவை மத்திய சிறை அதிகாரிகளிடம் மாநகர காவல் துறை வழங்கியுள்ளது.

மேலும் படிக்க