July 28, 2020
தண்டோரா குழு
கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கைகளில் மருதாணியால் வேல் வரைந்து பாஜகவினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்தும் இந்து கடவுள் முருகன் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையில், இதனைக் கண்டித்து இந்து அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில்,கோவை 18 வது வார்டு சக்தி கேந்திரா பொறுப்பாளர் செளமியா ராணி தலைமையில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் கைகளில் மருதாணியா வேல் வரைந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.