• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 36 மணி நேரம் முழு ஊரடங்கு துவங்கியது !

July 25, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் மாலை ஐந்து மணி முதல் தொடர்ந்து 36 மணி நேரம் முழு ஊரடங்கு துவங்கியது.இதனால் மாலையிலேயே கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், கோவையில் இன்று மாலை 5 மணி முதல் வரும் 27 ஆம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவு அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் இந்த நேற்று வெளியிட்டிருந்தார். தமிழகம் முழுவதும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு நேரத்தில் அதற்கு முந்தைய தினம் சாலைகளில் பொதுமக்கள் பல்வேறு அத்தியாவாசிய பொருட்களை வாங்க சமூக விலகல் இல்லாமல் நெருக்கமாக கூடினர்.இதனை தவிர்க்க வேண்டி மாலை ஐந்து மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் கடைகள் அனைத்தும் மாலையிலேயே அடைக்கப்பட்டன.இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

ஊரடங்கினை மீறும் வகையில் தேவையின்றி வெளியே நடமாடுவோரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்மாலையிலேயே ஊரடங்கு துவங்கியதால் உழவர் சந்தை, மார்க்கெட், மளிகைக்கடைகள், மீன் மார்க்கெட், பூ மார்க்கெட், இறைச்சிக்கடைகள், டாஸ்மாக் கடைகள், வர்த்தக தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட என அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன.

மேலும் படிக்க