July 24, 2020
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் நாளை மாலை 5 மணி முதல் வரும் 27-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் நாளை மாலை 5:00 மணி முதல் 27 காலை 6:00 மணி வரை கோவையில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கு ராசாமனி தெரிவித்துள்ளார். இந்த ஊரடங்கு காலத்தில் மருத்துவ சேவைகள், பால், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும்.அதே சமயம் உழவர் சந்தைகள், மீன் மார்க்கெட், பூமார்கெட், இறைச்சி கடைகள், டாஸ்மாக் கடைகள், வர்த்தக/தொழில் நிறுவனங்கள் எந்த அமைப்பும் இயங்காது. ஊரடங்கை மீறி தேவையின்றி நடமாடுபவர்கள் மீது காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.