July 24, 2020
தண்டோரா குழு
கோவை கொடிசியாவில் கூடுதலாக 346 படுக்கை வசதிகள் பயன்பாட்டிற்கு வந்தது.
கோவை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதுவரை கோவையில் கொரோனாவால் 2777 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில்,கொரோனா அறிகுறிகள் இன்றி வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக கொடிசியா வளாகம் செயல்பட்டு வருகிறது.கொடிசியா வளாகத்தில் ஏற்கனவே 400 படுக்கைகள் உள்ளது. இந்நிலையில் இன்று கோவை கொடிசியாவில் கூடுதலாக 346 படுக்கை வசதிகள் பயன்பாட்டிற்கு வந்தது.