• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மக்கள் நலன் கருதி ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸ் இன்று முதல் மூடல் !

July 20, 2020 தண்டோரா குழு

கோவை கிராஸ் கட் சாலையில் உள்ள பிரபல துணி கடையான ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸ் மக்கள் நலன் கருதி இன்று முதல் மூடல் – covid-19 தாக்கம் முடிந்த பின்னர் திறக்கப்படும்
என கடை உரிமையாளர் சிவ கணேஷ் அறிவித்துள்ளார்.

கோவை கிராஸ் கட் சாலையில் ஏராளமான ஜவுளி நிறுவனங்களும்,வணிக கடைகளும் உள்ளது. இதில் கோவை மக்களின் பிரதான துணி கடையாக உள்ளது ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸ்.இந்த நிலையில் அதன் உரிமையாளர் சிவ கணேஷ் தற்போது covid-19 சூழ்நிலையை கருத்தில் கொண்டும், மக்களின் உடல் ஆரோக்கியத்தை எண்ணியும் இன்று முதல் இந்த வைரஸ் தாக்கம் குறையும் வரை கடையை தற்காலிகமாக மூடி உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

தற்போது இந்த covid-19 வைரஸ் தாக்கம் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது.அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே அரசாங்கத்திற்கும் covid-19 வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக போராடும் அனைத்து தரப்பினருக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் எங்களுடைய ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தை இந்த வைரஸ் தாக்கம் குறையும் வரை தற்காலிகமாக மூடுகிறோம். எங்களுடைய முக்கிய நோக்கம் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் உடல்நலம் பொதுமக்களின் உடல்நலம் ஆகும் இந்த தாக்கம் எப்போது குறைகிறதோ அதுவரை எங்களுடைய கடையை தற்காலிகமாக மூடி உள்ளோம்.இது நாங்கள் எடுத்த தன்னிச்சையான முடிவு எங்களுடைய சங்கத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை எங்களுடைய நிறுவனத்தில் 600 ஆட்கள் பணியாற்றுகின்றனர் அவர்கள் அனைவருக்கும் கடந்த ஊரடங்கு காலத்தின்போது வழங்கியது போல் ஊதியம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

கடந்த 2 மாதத்திற்கு முன்னர் முதல்வரின் covid-19 தடுப்பு நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க